தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும்
வாழ்க தமிழ்!
  • முகப்பு
  • தமிழ் விக்கிபீடியா
  • மன்றங்கள்
    • தமிழ் மன்றம்
  • அகரவரிசை
    • 2013
    • 2014
    • 2015
  • சமூகவலைகளில்
    • டிவிட்டரில் தொடர
    • முகநூலில் இணைய
    • கூகுள்+ வட்டத்தில்
    • மின் இதழைப் பெற
    • ஓடைகளைக் காண
  • தேடும் பொறி

Wednesday, October 2, 2013

குழந்தைகளுக்குத் தோற்கக் கற்றுக்கொடுங்கள்

பாமரன்  /  at  11:51 AM  /  2 கருத்துரைகள்

the hindu தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரை:-
இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகளையும் கேடயங்களையும் பதக்கங்களையும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவே, பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்களுக்கும் அணி பயிற்றுநர்களுக்கும் சாம்பிள்களைத் தந்து வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
இன்றைக்கு எல்லாக் குழந்தையுமே ஏதாவது பரிசைக் கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாகப் பிரித்து நடத்துகிறார்கள். மேரிலேண்டில் உள்ள அமைப்பு ஒன்று தினமும் ஏதாவது போட்டி நடத்திப் பரிசுகளை வழங்குகிறது. அந்த தினமும்கூட பரிசளிப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கிறது.
தெற்கு கலிஃபோர்னியாவில், அமெரிக்க இளைஞர் கால்பந்து அணியின் கிளையொன்று ஒவ்வொரு கால்பந்துப் பருவத்திலும் சுமார் 3,500 விருதுகளைப் போட்டியாளர்களுக்குக் கொடுக்கிறது. எல்லா விளையாட்டு வீரரும் நிச்சயம் ஒன்று வாங்கிவிடுகிறார். மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்குகின்றனர்.
தேசிய அளவில் எல்லா இளைஞர், மாணவர் விளையாட்டு அமைப்புகளும் தங்களுடைய வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் பரிசுகளுக்கே 12% செலவிடுகின்றன.
அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 19,000 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்தப் பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகள் விற்பனை நடக்கின்றன. போ பிரான்சனும் நானும் குழந்தைகளைத் தேவைக்கு அதிகமாகப் பாராட்டிப் புகழ்வதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து நிறைய எழுதிவருகிறோம். இதில் அறிவியல் தெளிவாக இருக்கிறது. விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலைத் தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது.
“பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக் கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளையெல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்து விழுந்துவிடுகின்றனர்” என்று எச்சரிக்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் துறை நிபுணர் கரோல் துவெக். மேலும், தோற்றுப்போய்ப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் தில்லுமுல்லுகளைச் செய்து பாராட்டு பெறவும் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சமீபத்தில் பிராட்லே மோரிஸ், ஷானான் ஜென்டால் என்ற இரு ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்துப் படம் வரையச் சொல்லி அவர்களைக் கண்காணித்தனர். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது. 4 அல்லது 5 வயதுக் குழந்தைகள் இந்தக் கோப்பைகள், கேடயங்களுக்கெல்லாம் மகிழ்ந்து முட்டாளாவதில்லை. ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடிச் சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாகத் திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்குத் தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்குத் தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சிவசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்துத் திருத்தும் நாம், பாராட்டும்போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாகச் செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோருக்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல. இன்று சில சிறுவர்களுக்குச் செய்யும் இதையே நாளை சமூகத்துக்கும் செய்ய வேண்டியிருக்கும்.
“வீட்டின் வரவேற்பறை முழுக்கக் கோப்பைகளையும் கேடயங்களையும் அடுக்கி வைத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதைத் தங்களுடைய திறமையைப் பறைசாற்றும் கலாச்சாரமாகவே பலர் கடைப்பிடிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை திறமையை முழுமையாகக் காட்டுகிறார்களோ இல்லையோ, எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்றுவிட வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. இவர்களே படித்து முடித்து வேலைக்குப் போகும்போது, தினமும் அலுவலகம் செல்வதை வழக்கமாகக் கொள்கின்றனர். அங்கே போய் செய்யும் வேலையின் தரம்குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒரு நாள்கூட விடாமல் அலுவலகம் போய்வருவதையே சாதனையாகக் கருதுகின்றனர். தினமும் அலுவலகம் போய்வருவதற்காகவே தங்களுக்குப் பதவி உயர்வு தரப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் ழான் டுவென்ஞ்.
“எவ்வளவு திறமை இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட தோல்விபெறும் தருணங்களே அதிகமாக இருக்கும். எனவே, தோற்றாலும் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கான மனப்பக்குவம் வேண்டும்” என்கிறார் உளவியல் அறிஞர் ழான் டுவென்ஞ்.
குழந்தைகள் தவறு செய்யும்போது அவற்றை அழகான வெற்றிகளாகத் திரிப்பது நம்முடைய வேலையாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் அதில் உண்மையாகவே திறமை காட்டி வெற்றி பெற நாம் உதவ வேண்டும். ஒரு செயலில் கிடைக்கும் வெற்றி,தோல்வியைவிட, அந்த வெற்றியை அடைய எவ்வளவு விரைவில் அந்தத் திறமையை அவர்களுக்கு நாம் ஊட்டுகிறோம் என்பதே முக்கியம். நம்முடைய குழந்தை தோற்றாலும் வென்ற குழந்தையைப் பாராட்டும் பண்பை நாம் கற்றுத்தர வேண்டும். அதற்கு நாம் இந்த பிளாஸ்டிக், பித்தளை, அலுமினியத்தாலான பொருள்களைப் பரிசுகள் என்ற பெயரில் வாங்கிக் குவிப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும். கோப்பைகள், பதக்கங்கள், கேடயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் லாபத்துக்காக நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையை நாம் பலிகொடுக்கக் கூடாது.

(c) நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி


பகிர்
இயல்(கள்): சிந்தனை, படித்ததில் பிடித்தது, பள்ளிக்கூடம், முயலாமை இதழ் வெளியான நாள்: Wednesday, October 2, 2013

2 comments:

  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்October 2, 2013 at 9:50 PM

    குழந்தைகளுக்கு தோற்கக் கற்றுக் கொடுங்கள் - என்ற கருத்து
    புதிய சித்தாந்தமாய் இருக்கின்றது. இதை விரிவாய் விளக்கினீர்கள்.
    தோற்றாலும் தப்பில்லை என்கிற எண்ணத்தை ஏற்படுத்துங்கள்
    என்பதே இதன் பொருளாய் நான் எடுத்துக் கொள்கிறேன்.

    பதிவின் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டின.

    ReplyDelete
    Replies
    1. பாமரன்October 3, 2013 at 7:11 AM

      தங்களின் வருகைக்கு நன்றி அய்யா!

      Delete
      Replies
        Reply
    2. Reply
Add comment
Load more...

வாழ்க வளமுடன்

வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி! தமிழ்மொழி.வலை உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அனைவரும் பயன்பெறட்டும்.

நம் தோழர்கள்

முகநூல் பக்கம்

தமிழ்மொழி.வலை

என் நினைவலைகளில்

  • ►  2016 (3)
    • ►  July (2)
    • ►  February (1)
  • ►  2015 (22)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (8)
    • ►  July (7)
    • ►  May (2)
  • ►  2014 (17)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  March (13)
  • ▼  2013 (239)
    • ►  December (3)
    • ►  November (25)
    • ▼  October (66)
      • இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்
      • நாம் யார்? நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.
      • நீயே போர்வையை வைத்துக் கொள்!
      • நற்றிணையில் நட்புநெறி! - முனைவர் இரா.அன்பழகன்
      • போகர்.!
      • சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து இடாத சோறும் ...
      • பந்தி என்றால் என்ன?
      • குருவே உரைத்தாலும் கொடுத்த வாக்கை மீறாதே!
      • கண்ணன் அர்ச்சுனனுக்கு மட்டும் சாரதி இல்லை ..
      • பற்றை நீக்கினால் பற்றற்றவனைக் காணலாம் -அகப்பேய்ச்ச...
      • அழுகணிச் சித்தர் - அழிவில்லாததை நாடு
      • நான் தான் கற்றவன் செருக்கு அகல்க - நீதிநெறி விளக்கம்
      • சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!
      • ஐம்பூதத் தலங்கள்
      • தலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....
      • காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிச் சாப்பிடலாம்
      • கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்
      • அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன..?
      • நந்திக் கலம்பகம்
      • தமிழ்மொழியில் அறிவியல்.
      • வள்ளலார் ஒர் அணுவிஞ்ஞானி
      • பலி பீடம்
      • சிறுவயதிலும் சோறு போட்ட காமராஜர்
      • வடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்!
      • அன்னதான மகிமை
      • சுருளிமலை
      • ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு?
      • தமிழர் பெருமை... குழந்தையின் பாலினத்தை துல்லியமாக ...
      • இன்னா செய்தாரை ஒறுத்தல்
      • எனக்கே தண்ணி காட்டுறியா?
      • என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அ...
      • சிறந்த வீரன்!
      • காதல் நோய்க்கு மருந்து...
      • கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்
      • உணவே மருந்து - கம்பு
      • ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்
      • ஏர் முனைக்கு நேரிங்கே எதுவேமில்லே!
      • அந்தமான் நிகோபார் தீவுகள் குறித்து வெளியிடப்பட்ட ந...
      • ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
      • ஆசை வாழவும் விடாது! சாகவும் விடாது!
      • எண் ஏழு (Number 7)
      • வானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது?
      • சீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு
      • ஆலமரத்தின் அடியில் ஊர்க்கூட்டம் போடுவது ஏன் என்று ...
      • தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா?
      • கருப்பட்டியின் பயன்கள்
      • இன்று நீ ஆறாவது...
      • நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது ம...
      • 42 நட்சத்திரங்களும் 55 ஆண்டுகளும்
      • வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!
      • இராவணன் இயற்றிய நூல்கள்
      • தஞ்சைப் பெரிய கோயிலின் பழைய நிழற்படம்
      • எலுமிச்சை
      • மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
      • துரியோதனின் தந்திரம்!
      • குழந்தைகளுக்குத் தோற்கக் கற்றுக்கொடுங்கள்
      • வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது?
      • லால் பகதூர் சாஸ்திரி
      • கழுகுமலை வெட்டுவான் கோயில்
      • காமராஜர் அவர்களின் 39வது நினைவு அஞ்சலி
      • குறியீடுகளுக்கான தமிழ் வார்த்தை!
      • கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 9...
      • உலகின் முதல் மின் விளக்கு தொழிற்சாலை தொடக்கம் !
      • மானக்கஞ்சாறர் நாயனார் வரலாறு - தினமலர்
      • தமிழர்களின் உயர்ந்த உள்ளம்!
      • இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..!
    • ►  September (36)
    • ►  August (68)
    • ►  July (41)

அதிகம் படிக்கப்பட்டவை

  • திருக்குறள் கதைகள் - 423
    ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.  குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நி...
  • சீறாப்புராணம் - உமறுப்புலவர் சிறு குறிப்பு
    உமறுப்புலவர்:                          உமறுப்புலவரின் தந்தையார் செய்கு முகமது அலியார் என்பவர். இவர் சிலகாலம் திருநெல்வேலியை அடுத்த...
  • தொகைச் சொல் - விரித்தெழுதுதல் - தமிழிலக்கணம் அறிவோம்
    பல கூறுகள் உள் அடங்கிய ஒரு சொல் தொகைச்சொல். ஒரு சொல்லின் கீழ் அடங்கும், வரையறுக்கப் பட்ட சில சொற்கள்,  தொகைச் சொற்கள் எனப்படும். தொகைச...

நம் இல்லம் நாடியவர்கள்

பகுக்கப்பட்ட இயல்கள்

அகம் (7) அகராதி (23) அண்ணா (2) அம்பேத்கார் (1) அலெக்சாண்டர் (1) அறம் (8) அறிவியல் (17) ஆங்கிலம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆறுமுகநாவலர் (1) இசுலாம் (1) இந்தியா (8) இயற்கை (9) இரண்டாம் சூர்யவர்மன் (1) இராவணன் (1) இலக்கணம் (4) உண்மை (14) உதவி (1) ஓசோ (1) கடவுள் (12) கட்டிடக்கலை (6) கணிதம் (14) கண்ணதாசன் (5) கம்பர் (2) கலைவாணர் (1) கல்வி (36) கவிஞர் (5) கவிதை (2) காமராசர் (11) சங்க இலக்கியம் (14) சட்டமாமேதை (1) சித்தர்கள் (10) சிந்தனை (97) சிறுகதை (69) சிறுவர் இலக்கியம் (25) சிற்றிலக்கியம் (2) சேரர் (1) சைவம் (11) சொற்பொருள் (6) சோழர்கள் (2) சோழன் (2) தந்தைப்பெரியார் (1) தமிழகம் (34) தமிழ் (51) தனிப்பாடல் (1) திருக்குறள் (9) திருநாவுக்கரசர் (4) திரைப்படம் (3) தினமலர் (6) தெய்வங்கள் (6) தெனாலிராமன் (1) தென்கச்சி (2) நகைச்சுவை (3) நாடகம் (2) நாட்டுப்புரம் (16) நாயன்மார்கள் (11) நிழற்படம் (3) நேதாஜீ (2) நேரு (1) பக்தி (21) பசுமை (5) படித்ததில் பிடித்தது (159) பதினெண்கீழ்க்கணக்கு (4) பதினெண்மேற்கணக்கு (1) பழங்கள் (5) பழமொழி (5) பள்ளிக்கூடம் (5) பாரதியார் (1) புலவர்கள் (6) புறநானூறு (1) புறம் (1) பெயர்கள் (1) பெளத்தம் (1) பொது அறிவு (23) பொன்மொழி (9) மகாத்மாகாந்தி (2) மகாபாரதம் (3) மருத்துவம் (15) முயலாமை (7) வரலாறு (34) வள்ளலார் (2) விடுதலை (2) விருதுநகர் (2) விவேகானந்தர் (1) வைணவம் (3) ஜி.யு.போப் (1)

அஞ்சல் பெட்டி

Name

Email *

Message *

காப்புரிமை © 2013 தமிழ்மொழி - தமிழால் நாமும் நம்மால் தமிழும் பயனுற வேண்டும் இத்தளத்தை நிர்வாகிப்பது தமிழ்மொழி.வலை
. சேவை வழங்குநர் பிளாக்கர்.